27.4.06

அவளால் நான்...



மனதில் ஓர் மௌன போராட்டம்
கனவில் உன் கவிதை தாலாட்டும்
இணைவதால் இதயம் பூ பூக்குதே...

சிற்பியாய் மாறிப் பார்க்கிறேன்
சிற்பமாய் வடித்துப் பார்க்கிறேன்
தேவதை உன்னை கண்டதாலே...

கண்களைக் களவு கொள்கிறாய்
காற்றில் என்னை கடத்தி செல்கிறாய்
மூச்சில் உன் ஸ்வாசம் கலந்ததாலே...

உணர்வினை உறசிப் பார்க்கிறாய்
உணர்ச்சியை உடைத்து பார்க்கிறாய்
ஊமையாய் உரைந்து போகிறாயே...

No comments: