25.4.06

நீ?



சிறகு போலவே
இரவு இருட்டினில்
நான் பறக்க நினைப்பவன்
நீ?

தவணை முறையினில்
சில தவறு செய்தபின்
அதை திருத்த நினைப்பவன்
நீ?

பொழுது விடிந்ததும்
என் போர்வை மறைவினில்
பல கனவை ரசிப்பவன்
நீ?

புதுமை செய்யவே - நான்
பிறவியெடுத்தவன்
என்னை புரிந்து கொண்டாலே
இப் புவியில் தோழி நீ.......

No comments: