25.4.06

விலை மாது


சிறகாக பறந்திடவே
தினம் தோறும் எண்ணிடுவாள்
சிதைகின்ற மனதொடு
புதை குழியில் மணம் சேர்ப்பாள்

இரவின் இடையினில்
இன்பத்தை உணர்ந்துவிட்டு
பகலின் மடியினில்
பாரத்தை பணயம் வெய்ப்பாள்

பால் கொடுக்கும் வண்ணத்தை
பலியாக எண்ணிவிட்டு
பாராட்டை எண்ணாமல்
பரிசையும் பெற்றிடுவாள்

சோகத்தின் சுவடுக்கு
சுகம் சேர்க்க வருபவர்கள்
சுகங்ளை பெற்றுவிட்டு
சுமையை மட்டும் பரிசளிப்பர்

1 comment:

Anonymous said...

MAchi... unn kavethi romba mokkaiya erukku....